செய்திகள்
வாலாஜாபாத் அருகே சிவன் கோவிலில் கொள்ளை முயற்சி
வாலாஜாபாத் அருகே சிவன் கோவிலில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள திம்மராஜ பேட்டையில் ராமலிங்கேஸ்வரர் எனப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் காஞ்சீபுரம் - வாலாஜாபாத் சாலையில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் உற்சவர் இருக்கும் மண்டபத்தில் தனி அறையில் 21 ஐம்பொன் சிலைகள், தங்க நகைகள், வெள்ளி திருவாரணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. கோவிலில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு அலாரமும் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பூஜை முடிந்த பிறகு பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார். நள்ளிரவில் கொள்ளையர்கள் ஏணி மூலம் சுவர் ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் கோவில் அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராவை துண்டித்தனர்.
கோவில் மண்டபத்தில் உள்ள 4 பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்தனர். ஐம்பொன் சிலைகள் மற்றும் நகைகள் இருக்கும் அறைக்கதவு பூட்டை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இன்று காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள திம்மராஜ பேட்டையில் ராமலிங்கேஸ்வரர் எனப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் காஞ்சீபுரம் - வாலாஜாபாத் சாலையில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் உற்சவர் இருக்கும் மண்டபத்தில் தனி அறையில் 21 ஐம்பொன் சிலைகள், தங்க நகைகள், வெள்ளி திருவாரணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. கோவிலில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு அலாரமும் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பூஜை முடிந்த பிறகு பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார். நள்ளிரவில் கொள்ளையர்கள் ஏணி மூலம் சுவர் ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் கோவில் அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராவை துண்டித்தனர்.
கோவில் மண்டபத்தில் உள்ள 4 பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்தனர். ஐம்பொன் சிலைகள் மற்றும் நகைகள் இருக்கும் அறைக்கதவு பூட்டை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இன்று காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.