செய்திகள்
கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இலங்கை கடற்படை நடவடிக்கை
கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேதாரண்யம்:
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே உள்ள காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (22) நாகை நம்பியார் நகரை சேர்ந்த அரவிந்த் (20) உள்ளிட்ட 9 பேர் காரைக்கால் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 13-ந் தேதி கடலுக்கு சென்ற அவர்கள் பெரிய விசைப்படகில் தங்கி மீன் பிடித்தனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 நாட்டின் கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பாலமுருகன், அரவிந்த் ஆகியோர் காயம் அடைந்தனர். பாலமுருகனுக்கு கழுத்து, தோள்பட்டையிலும், அரவிந்துக்கு தொடையிலும் காயம் ஏற்பட்டது.
இதனால் சக மீனவர்கள் அதிச்சி அடைந்தனர். உடனடியாக காயம் அடைந்த மீனவர்களை அழைத்து கொண்டு படகில் கரைக்கு திரும்பினர். காயம் அடைந்த 2 மீனவர்களுக்கும் காரைக்கால் ஆஸ்பத்திரியில் முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் 2 பேரும் புதுவை ஜிம்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம், நாகை, மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி சிறைபிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வந்தது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக மீனவர்களுடன் டெல்லியில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது இலங்கை அமைச்சர் இனி தமிழக மீனவர்களை சிறை பிடிக்க மாட்டோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே உள்ள காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (22) நாகை நம்பியார் நகரை சேர்ந்த அரவிந்த் (20) உள்ளிட்ட 9 பேர் காரைக்கால் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 13-ந் தேதி கடலுக்கு சென்ற அவர்கள் பெரிய விசைப்படகில் தங்கி மீன் பிடித்தனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 நாட்டின் கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பாலமுருகன், அரவிந்த் ஆகியோர் காயம் அடைந்தனர். பாலமுருகனுக்கு கழுத்து, தோள்பட்டையிலும், அரவிந்துக்கு தொடையிலும் காயம் ஏற்பட்டது.
இதனால் சக மீனவர்கள் அதிச்சி அடைந்தனர். உடனடியாக காயம் அடைந்த மீனவர்களை அழைத்து கொண்டு படகில் கரைக்கு திரும்பினர். காயம் அடைந்த 2 மீனவர்களுக்கும் காரைக்கால் ஆஸ்பத்திரியில் முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் 2 பேரும் புதுவை ஜிம்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம், நாகை, மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி சிறைபிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வந்தது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக மீனவர்களுடன் டெல்லியில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது இலங்கை அமைச்சர் இனி தமிழக மீனவர்களை சிறை பிடிக்க மாட்டோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.