செய்திகள்
வேதாரண்யம் அருகே பெண் மீது தாக்குதல்: மற்றொரு பெண் கைது
வேதாரண்யம் அருகே பெண்ணை கட்டையால் தாக்கிய வழக்கில் மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கீழக்குத்தகை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி லெட்சுமி (55). இவரது மகனுக்கு வேதாரண்யம் பகுதி தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ராமையன் மனைவி விஜயா (45) என்பவரது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விஜயா தனது மகளை பார்ப்பதற்காக சென்றபோது தன்னை மாமியார் பாகுபாடாக நடத்துகிறார் என மகள் கூறியுள்ளர். இதுகுறித்து லெட்சுமியிடம் அவர் கேட்டுள்ளார்.
இதில் ஒருவருக்கொருவர் தகராறு ஏற்பட்டு லெட்சுமியை விஜயா கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த லெட்சுமி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விஜயாவை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தார்.
வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கீழக்குத்தகை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி லெட்சுமி (55). இவரது மகனுக்கு வேதாரண்யம் பகுதி தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ராமையன் மனைவி விஜயா (45) என்பவரது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விஜயா தனது மகளை பார்ப்பதற்காக சென்றபோது தன்னை மாமியார் பாகுபாடாக நடத்துகிறார் என மகள் கூறியுள்ளர். இதுகுறித்து லெட்சுமியிடம் அவர் கேட்டுள்ளார்.
இதில் ஒருவருக்கொருவர் தகராறு ஏற்பட்டு லெட்சுமியை விஜயா கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த லெட்சுமி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விஜயாவை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தார்.