செய்திகள்
பல்லாவரத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி
பல்லாவரத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
பழைய பல்லாவரம் வெங்கட்ராமன் நகர், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 8) அருகில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அவன் நண்பர்களுடன் அருகில் உள்ள ராஜாமலை கல்குவாரி குட்டையில் குளித்தான்.
ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி பலியானான். அவனது உடலை தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.