செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் ரெயில்வே ஊழியர் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-09-19 06:21 GMT   |   Update On 2016-09-19 06:21 GMT
திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அக்கம் பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 25). ரெயில்வே ஊழியர். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. இந்த நிலையில் சுதாகர் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுதாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News