செய்திகள்
அச்சிறுப்பாக்கத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
அச்சிறுப்பாக்கத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன்.
இவர் அச்சிறுப்பாக்கம் எலப்பாக்கம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு தீனதயாளன் மதுக்கடையை பூட்டிவிட்டு ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அவருடன் ஊழியர் மணியும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் தீனதயாளனின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளினார்கள்.
பின்னர் தீனதயாளன் பையில் வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தீனதயாளன் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன்.
இவர் அச்சிறுப்பாக்கம் எலப்பாக்கம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு தீனதயாளன் மதுக்கடையை பூட்டிவிட்டு ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அவருடன் ஊழியர் மணியும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் தீனதயாளனின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளினார்கள்.
பின்னர் தீனதயாளன் பையில் வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தீனதயாளன் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.