செய்திகள்

பழவந்தாங்கலில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பாதிப்பு

Published On 2016-08-27 14:37 IST   |   Update On 2016-08-27 14:37:00 IST
பழவந்தாங்கலில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டவர்களை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆலந்தூர்:

பழவந்தாங்கல், நேரு காலனி 2-வது தெருவில் வசித்து வருபவர் மதிசேகர். இவரது மகள் மதிவதனி (வயது8).

மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாடக்ளாக மதிவதனிக்கு காய்ச்சல் இருந்து வந்தது. உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் அவருக்கு நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதே போல் பழவந்தாங்கல் பி.வி.நகரைச் சேர்ந்த அம்பிகாவும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி அறிந்ததும் ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி நல அலுவலர் மல்லிகா, சுகாதார அலுவலர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் காய்சலால் பாதிக்கப்பட்ட மதிவதனி, அம்பிகா ஆகியோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆஸ்பத்திரிக்கு சென்று கேட்டறிந்தனர்.பின்னர் பழவந்தாங்கல் பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆஸ்பத்திரியில் கேட்டோம். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும், சுத்தமான குடிநீரையும் குடிக்க வேண்டும் என்றனர்.

Similar News