செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2016-08-24 12:38 IST   |   Update On 2016-08-24 12:38:00 IST
தமிழ்நாடு அரசு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.
காஞ்சீபுரம்:

தமிழ்நாடு அரசு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில பொருளாளர் ஜேனக் பாய் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பவானி, வசந்தகுமாரி, ரெமா முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் நிர்மலா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். நர்சுகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம சுகாதார நிலைய நர்சு பணியிடங்களை நிரப்ப வேண்டும், 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நர்சுகள் பங்கேற்றனர்.

Similar News