செய்திகள்

கடலூரில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2016-07-28 17:41 IST   |   Update On 2016-07-28 17:41:00 IST
கடலூரில் வயிற்றுவலி பிரச்சினை காரணமாக வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை கொண்டார்.
கடலூர்:

கடலூர் மேற்கு ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 25). விவசாயி. இவருக்கு தீராத வயிற்றுவலி பிரச்சினை இருந்து வந்தது. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பலன்இல்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். மனமுடைந்த கமலக்கண்ணன் தனக்கு சொந்தமான நிலத்தில் வைத்து பூச்சி மருந்தை(வி‌ஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கமலகண்ணனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News