செய்திகள்
கடலூரில் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கடலூரில் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அரசு தடைவிதித்த லாட்டரி சீட்டை விற்பனை செய்வதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் பிள்ளையார் கோவில் அருகே ஒருவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசாரை பார்த்து அவர் தப்பி ஓட முயன்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து 13 லாட்டரி சீட்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் அவர் கடலூர் முதுநகர் புருக்கீஸ்பேட்டையை சேர்ந்த குமார் என்ற செல்வபாண்டியன்(வயது 49) என்றும் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அரசு தடைவிதித்த லாட்டரி சீட்டை விற்பனை செய்வதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் பிள்ளையார் கோவில் அருகே ஒருவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசாரை பார்த்து அவர் தப்பி ஓட முயன்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து 13 லாட்டரி சீட்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் அவர் கடலூர் முதுநகர் புருக்கீஸ்பேட்டையை சேர்ந்த குமார் என்ற செல்வபாண்டியன்(வயது 49) என்றும் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.