செய்திகள்
கடலூரில் கடல் சீற்றம்: மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பினர்
கடலூர் துறைமுகத்தில் இருந்து விசைபடகு மற்றும் பைபர் படகுகளுடன் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று கடல் சீற்றம் காரணமாக கரை திரும்பினார்கள்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைகோரி, ராசாப்பேட்டை, சித்திரைபேட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைபடகு மற்றும் பைபர் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.
இன்று காலை வழக்கம் போல் மீனவர்கள் தங்கள் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலூரில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. அவர்கள் கரைக்கு திரும்பினார்கள்.
கடல் சீற்றம் குறித்து துறைமுக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாகதான் இருக்கும். இது இயல்பான ஒன்றாகும். மேலும் வடகிழக்கு பருவநிலையில் இருந்து தென்மேற்கு பருவநிலைக்கு மாற்றம் ஏற்படுவதனால் இதுபோல் கடல் சீற்றம் ஏற்படும்.
இது புயல் தோன்றுவதற்கான அறிகுறி கிடையாது. இதனால் மீனவர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை என்றார்.
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைகோரி, ராசாப்பேட்டை, சித்திரைபேட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைபடகு மற்றும் பைபர் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.
இன்று காலை வழக்கம் போல் மீனவர்கள் தங்கள் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலூரில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. அவர்கள் கரைக்கு திரும்பினார்கள்.
கடல் சீற்றம் குறித்து துறைமுக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாகதான் இருக்கும். இது இயல்பான ஒன்றாகும். மேலும் வடகிழக்கு பருவநிலையில் இருந்து தென்மேற்கு பருவநிலைக்கு மாற்றம் ஏற்படுவதனால் இதுபோல் கடல் சீற்றம் ஏற்படும்.
இது புயல் தோன்றுவதற்கான அறிகுறி கிடையாது. இதனால் மீனவர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை என்றார்.