தெரு விளக்குகள் எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் கட்டி கவுன்சிலர் நூதன போராட்டம்
கடலூர்:
கடலூர் நகராட்சி 10–வது வார்டு பகுதியான சுதர்சனம் தெரு, வேணுகோபாலபுரம், உப்பலவாடிமெயின்ரோடு உள்ளிட்ட சில தெருக்களில் கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரியவில்லை.
இது குறித்து அந்த வார்டு கவுன்சிலரும், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினருமான போஸ்ராமச் சந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும், மின் விளக்குகள் சரி செய்யப்படவில்லை.
இதனால் கவுன்சிலர் போஸ் ராமச்சந்திரன் நேற்று இரவு 7 மணி அளவில் மின் விளக்கு எரியாமல் இருந்த சுதர்சனம் தெருவில் தீப்பந்தத்தை ஏந்தி போராட்டம் நடத்தினார். பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் தீப்பந்தத்தை கட்டி வைத்தார்.
பின்னர் இது பற்றி அவர் கூறுகையில், எனது வார்டில் 102 தெரு மின்விளக்குகள் உள்ளன. அதில் 22 தெரு மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இது பற்றி நகரசபை கூட்டத்திலும் பலமுறை வலியுறுத்தி விட்டேன். தலைவர், ஆணையாளர், பொறியாளரிடமும் பலமுறை எழுத்து பூர்வமாக கொடுத்து விட்டேன்.
ஆனால் இது வரை மின் விளக்குகளை சரி செய்து தரவில்லை. இதனால் எனது வா ர்டில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆகவே இதை தடுக்க மின்விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என்றார்