செய்திகள்
கடலூரில் தடையை மீறி ஊர்வலம்: கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேர் கைது
கடலூரில் தடையை மீறி ஊர்வலம் நடத்தியதால் கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
தமிழக வக்கீல்கள் போராட்டத்தை அரசு உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கடலூர் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நிர்வாகிகள் ஜெகத்ரட்சகன், கலிய பெருமாள், ராஜூ, சக்திவேல், ஜெயின்ராம், திருமலை மற்றும் தொண் டர்கள் கடலூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.
அவர்கள் அங்கிருந்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை என்றனர்.
இருப்பினும் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 150 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
தமிழக வக்கீல்கள் போராட்டத்தை அரசு உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கடலூர் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நிர்வாகிகள் ஜெகத்ரட்சகன், கலிய பெருமாள், ராஜூ, சக்திவேல், ஜெயின்ராம், திருமலை மற்றும் தொண் டர்கள் கடலூர் உழவர் சந்தை அருகே திரண்டனர்.
அவர்கள் அங்கிருந்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை என்றனர்.
இருப்பினும் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 150 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.