செய்திகள்

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-07-25 15:43 IST   |   Update On 2016-07-25 15:43:00 IST
கடலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அமைந்து உள்ளனர்.
கடலூர்:

குறிஞ்சிப்பாடி தாலுகா கீழ்பூவாணி குப்பத்தை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் தனது கணவர் விக்னேசுடன் இன்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் காயல்பட்டு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் கடந்த 22-ந் தேதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். தற்போது நாங்கள் அன்னவெளி கிராமத்தில் வசித்து வருகிறோம். காதல் திருமணம் செய்த எங்களை கொலை செய்து விடுவோம் என எனது சித்தி மற்றும் அண்ணன் மிரட்டி வருகின்றனர். இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Similar News