செய்திகள்
வங்கி ஊழியர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 2 பேர் கைது
வேளச்சேரியில் வங்கி ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி:
வேளச்சேரி, வி.ஜி.பி செல்வா நகரில் வசித்து வருபவர் விக்னேஷ். தனியார் வங்கி ஊழியர் இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்த போது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே 2 மர்ம வாலிபர்கள் இருந்தனர். அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் கூச்சலிட்டார் பொதுமக்கள் திரண்டு வந்து ஒருவனை மடக்கி பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் கொரட்டூரை சேர்ந்த சத்யா என்பதும், தப்பி ஓடியது கூட்டாளியான பால் பாண்டியன் என்பதும் தெரிந்தது. இந்தநிலையில் இன்று காலை பால்பாண்டியனை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.