செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: சாயப்பட்டறை தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் சாயப்பட்டறை தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஈரோடு:
சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையத்தை சேர்தவர் மோகனசாமி (வயது 46) இவர் சிப்காட் பகுதியில் உள்ள சாய ஆலையில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சிப்காட்யில் உள்ள கம்பெனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார் அப்போது ஈங்கூர் கவுண்டனூர் காலனியினை சேர்ந்த இளைஞர் வடிவேல் என்பவர் பைக்கில் வந்து மோகனசாமி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் மோகனசாமி பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை இறந்து விட்டார்.
இது குறித்து சென்னிமலை போலீஸார் விசாரனை நடத்தினர். இறந்த மோகனசாமிக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார் இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். மனைவி ஜோதி மணி இவரிடம் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்.