செய்திகள்

டி.என்.பாளையம் அருகே யானைகள் மீண்டும் அட்டகாசம்

Published On 2016-06-17 15:49 IST   |   Update On 2016-06-17 15:49:00 IST
டி.என்.பாளையம் அருகே யானைகள் பயிர்களை மிதித்து நாசம் செய்தது.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச் சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் பொதுமக்களுக்கு அதிக இடையூறு செய்வது யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடந்த 2 மாதங்களாகவே புஞ்சை துறையம் பாளையம், கொண்டையம் பாளையம் சுண்டக்கரடு,கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்வது வாடிக்கையாகி விட்டது.

நேற்று முன் தினம் இரவு கொண்டையம் பாளையம் சுண்டக்கரடு கல்குவாரி தோட்டப் பகுதியிலுள்ள பெருமாள், கோயம்புத்தூரை சேர்ந்தவர் தோட்டம் இருவரின் தோட்டத்தில் 3 யானைகள் புகுந்து மசால் பயிர் 25 சென்ட் அளவில் செவ்வாழைகள் 500-க்கும் மேற்பட்டதை மிதித்து நாசம் செய்தது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட்டு விண்ணப்பிக்குமாறு கூறிவிட்டு சென்று விட்டனர்.

Similar News