செய்திகள்
பரங்கிமலையில் மகன்-மகளுடன் தாய் மாயம்
பரங்கிமலையில் மகன் – மகளுடன் தாய் மாயம். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
பரங்கிமலை தசரதபுரத்தை சேர்ந்தவர் ஜோதி இவர் நேற்று இரவு பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது.
எனது மகள்அபர்ணா(29) பேரப்பிள்ளைகள் ஹரணி (11), ரவிச்சந்திரன்(8) ஆகியோரை நேற்று காலை முதல் காணவில்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து அபர்ணாவின் கணவர் சுரேஷ்சிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் சுரேஷ் நான் நேற்று காலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பினேன். அப்போது 3 பேரையும் காணவில்லை என்று கூறினார். அபர்ணா, ஹரிணி, ரவிச்சந்திரன் ஆகியோர் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை. அபர்ணாவின் செல் போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.