செய்திகள்

ஈரோடு அருகே வாலிபர் மாயம்

Published On 2016-06-17 15:20 IST   |   Update On 2016-06-17 15:20:00 IST
ஈரோடு அருகே வாலிபர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). சம்பவத்தன்று இவர் நாடார் மேட்டில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்தார். அப்போது அவர் யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றார். இதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் சுரேசை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே இது பற்றி சுரேசின் மனைவி சுஜிதா சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சுரேசை தேடி வருகிறார்கள்.

Similar News