செய்திகள்

கானத்தூரில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

Published On 2016-06-14 15:18 IST   |   Update On 2016-06-14 15:18:00 IST
கானத்தூரில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

கானத்தூரில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தண்டி, நிலா தெருவில் வசித்து வருபவர் மாரி. கடந்த 6-ந்தேதி இவரது வீட்டில் இருந்த 24 பவுன் நகை திருட்டு போனது.

இதுகுறித்து கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரி வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பர் திருப்பதியை சேர்ந்த திலீப்குமார் நகையை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை மீட்டனர்.

Similar News