செய்திகள்

விமான நிலையத்தில் பைக் திருடிய சிறுவன் கைது

Published On 2016-06-14 15:11 IST   |   Update On 2016-06-14 15:11:00 IST
சென்னை விமான நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சரக்கு ஏற்றி, இறக்கும் இடத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து விமான நிலைய போலீசில் அதிக அளவு புகார்கள் வந்தன.

இன்ஸ்பெக்டர் வெங்கட் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது மீனம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News