செய்திகள்

தாம்பரம்-வேளச்சேரி ரோட்டில் பயணிகள் நிழற்குடைக்கு ஏற்பாடு

Published On 2016-06-13 14:55 IST   |   Update On 2016-06-13 14:55:00 IST
பொதுமக்கள் புகாரை ஏற்று தாம்பரம்–வேளச்சேரி ரோட்டில் பயணிகள் நிழற்குடை கட்ட எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை:

செம்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவுக்கு வரவேற்பு மற்றும் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

முருகன் தலைமை தாங்கினார். கமலக்கண்ணன் வரவேற்றார். பா.ஜனதா சார்பில் எஸ்.ஆர்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். தாம்பரம்-வேளச்சேரி ரோட்டை அகலப்படுத்தும் போது செம்பாக்கம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. இதனால் 2 வருடமாக பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

பொதுமக்கள் புகார்களை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 பயணிகள் நிழற் குடைகள், செம்பாக்கம் 7–வது தெருவில் இருந்து நன்மங்கலம் ஏரிக்கு நீர்வழிப்பாதை சீரமைப்பு, அஸ்தினாபுரம்– செம்பாக்கம் சிமெண்டு ரோட்டை அகலப்படுத்துதல் ஆகியவற்றை செய்து தருவதாக உறுதி அளித்தார்.

மேலும் தொல்லியல் துறை யின் தடை ஆணையை ரத்து செய்ய முயற்சி மேற்கொள் வதாகவும், எஸ்.ஆர்.ராஜா உறுதியளித்தார். சுந்தரமூர்த்தி, வெங்கட்ரமணி, லோகநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News