செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடியதாக 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தெரு பகுதியில் காசு வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பதாக சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த அன்சாரி, குமார், நாகராஜ், முரளி, வாசு, சந்தியப்பன், கணேசன், தமிழ்செல்வன் மற்றும் செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 410 பறிமுதல் செய்யப்பட்டது.