செய்திகள்
பாலாற்று படுகையில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பாலாற்று படுகை பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக காஞ்சி தாலுக்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பருத்திகுன்றம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.
இதேபோல் மாகறல் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த டில்லிகணேஷ், நீலகண்டன், இளங்கோ ஆகியோரை மாகறல் போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.