செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு
காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளை நீக்கி அதன் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காஞ்சீபுரம்:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலோடு, காஞ்சீபுரம் அடுத்த பரந்தூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கர், கூரம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.
இதே போன்று பா.ம.க. மாநில துணைத்தலைவர் காஞ்சி குமாரசாமி கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலோடு, காஞ்சீபுரம் அடுத்த பரந்தூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கர், கூரம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.
இதே போன்று பா.ம.க. மாநில துணைத்தலைவர் காஞ்சி குமாரசாமி கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.