செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கால்களை இழந்த ஆமைக்கு சக்கரங்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை

Published On 2016-06-12 05:59 IST   |   Update On 2016-06-12 05:59:00 IST
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கால்களை இழந்த ஆமைக்கு சக்கரங்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வண்டலூர்:

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 14 நட்சத்திர ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள கீரிப்பிள்ளை கடித்ததில், இங்குள்ள ஒரு பெண் நட்சத்திர ஆமையின் முன்னங்கால்கள் நடக்கமுடியாத அளவிற்கு ஊனமாகி விட்டது. இந்த ஆமையால் நடமாடவும், உணவைத் தேடிச்செல்லவும் இயலாத நிலை ஏற்பட்டது.

இதனை சரிசெய்வதற்காக பூங்கா கால்நடை மருத்துவர் குழு சிறப்பு ஏற்பாட்டை செய்தது. அதன்படி ஆமையின் முன்னங்கால்களுக்கு பதிலாக இரண்டு சக்கரங்கள் அடிப்புற ஓட்டின்மீது ஒட்டி பொருத்தப்பட்டன. இந்த சக்கரங்களின் உதவியுடன் ஆமை வழக்கத்தை விட வேகமாக விரும்பும் இடத்திற்கு சென்று வரவும், உணவைத் தேடிச்செல்லவும் முடிகிறது.

இந்த தகவலை பூங்கா இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Similar News