செய்திகள்
கடலூரில் அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 10 பேர் கும்பல் வெறிச்செயல்
கடலூரில் இன்று காலை அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் வினோத்குமார் (வயது21), சதீஷ்குமார் (19). இவர்களில் வினோத்குமார் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சதீஷ்குமார் மயிலம் அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று காலை வினோத் குமார் வீட்டில் குளித்துக் கொண்டு இருந்தார். சதீஷ்குமார் கல்லூரி செல்வதற்காக உடை மாற்றிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் 10 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் திடீரென்று வீட்டு முன்பு திரண்டனர்.
அவர்களை பார்த்ததும் வினோத்குமாரின் பாட்டி கோசலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அந்த கும்பலிடம் நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் பதில் கூறவில்லை. வேகமாக வீட்டிற்குள் செல்ல முயன்றனர். கோசலை அவர்களை தடுத்தார். ஆனால் அவர்கள் கோசலையை கீழே தள்ளி விட்டு வீட்டிற்குள் புகுந்தனர்.
ஆவேசமாக கொலை வெறியுடன் காணப்பட்ட அந்த கும்பல் வீட்டில் உடை மாற்றிக்கொண்டிருந்த சதீஷ்குமாரை வெட்டுவதற்காக பாய்ந்தனர். அவர் வீட்டிற்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை மடக்கி பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் சதீஷ்குமார் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்படி இருந்தும் அந்த கொலை வெறிக்கும்பலின் ஆத்திரம் தீரவில்லை.
வினோத்குமார் எங்கே? என்று தேடினர். அவர் குளியலறையில் குளித்து கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்றனர். குளியல் அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குளித்துக்கொண்டிருந்த வினோத்குமாரை அரிவாளால் வெட்டினர்.
இதில் வினோத்குமார் அதே இடத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடியது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் கொலைக்கும்பலை சேர்ந்தவர்கள் ரோட்டில் வேகமாக ஓடினார்கள். போலீசார் அவர்களை விரட்டி சென்று 10 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் நிலையம் அருகே இன்று காலை நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் வினோத்குமார் (வயது21), சதீஷ்குமார் (19). இவர்களில் வினோத்குமார் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சதீஷ்குமார் மயிலம் அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று காலை வினோத் குமார் வீட்டில் குளித்துக் கொண்டு இருந்தார். சதீஷ்குமார் கல்லூரி செல்வதற்காக உடை மாற்றிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் 10 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் திடீரென்று வீட்டு முன்பு திரண்டனர்.
அவர்களை பார்த்ததும் வினோத்குமாரின் பாட்டி கோசலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அந்த கும்பலிடம் நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் பதில் கூறவில்லை. வேகமாக வீட்டிற்குள் செல்ல முயன்றனர். கோசலை அவர்களை தடுத்தார். ஆனால் அவர்கள் கோசலையை கீழே தள்ளி விட்டு வீட்டிற்குள் புகுந்தனர்.
ஆவேசமாக கொலை வெறியுடன் காணப்பட்ட அந்த கும்பல் வீட்டில் உடை மாற்றிக்கொண்டிருந்த சதீஷ்குமாரை வெட்டுவதற்காக பாய்ந்தனர். அவர் வீட்டிற்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை மடக்கி பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் சதீஷ்குமார் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்படி இருந்தும் அந்த கொலை வெறிக்கும்பலின் ஆத்திரம் தீரவில்லை.
வினோத்குமார் எங்கே? என்று தேடினர். அவர் குளியலறையில் குளித்து கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்றனர். குளியல் அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குளித்துக்கொண்டிருந்த வினோத்குமாரை அரிவாளால் வெட்டினர்.
இதில் வினோத்குமார் அதே இடத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடியது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் கொலைக்கும்பலை சேர்ந்தவர்கள் ரோட்டில் வேகமாக ஓடினார்கள். போலீசார் அவர்களை விரட்டி சென்று 10 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் நிலையம் அருகே இன்று காலை நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.