செய்திகள்
கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
கடலூர்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்தது. இரவு முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சம்கொல்லை கிராமத்தில் சாலை ஓரத்தில் நின்ற புளியமரம் வேரோடு சாய்ந்தது. விருத்தாசலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த நெல்மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்தன.
கடலூரில் நேற்று காலை 8 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், தேவனாம்பட்டினம், துறைமுகம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது.
கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருகி ஓடியது.
ரெட்டிச்சாவடி, மேல் அழிஞ்சுப்பட்டு, கீழ்அழிஞ்சுப்பட்டு, பள்ளிப்பட்டு, கீழ்குமாரமங்கலம், தூக்கனாம்பாக்கம், நல்லாத்தூர், அழகியநத்தம் உட்பட்ட கிராமங்களில் விடிய, விடிய மழை பெய்தது.
ரெட்டிச்சாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கின. இதில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் சில பகுதிகளில் மழை நீர் தேங்கின.
கடலூர் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 34.8 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூரில் கடல் இன்று அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்தன. புயல் எச்சரிக்கை காரணமாக கடலூரில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை பகுதிகளில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. விழுப்புரத்தில் காலை 9 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. காலை 11.30 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை பெய்தது.
விழுப்புரம் நேருஜி சாலை, விழுப்புரம் புதுவை சாலை, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் கீழ் பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதே போல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். நேற்று பெய்த மழையினால் வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்தது. இரவு முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சம்கொல்லை கிராமத்தில் சாலை ஓரத்தில் நின்ற புளியமரம் வேரோடு சாய்ந்தது. விருத்தாசலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த நெல்மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்தன.
கடலூரில் நேற்று காலை 8 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், தேவனாம்பட்டினம், துறைமுகம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது.
கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருகி ஓடியது.
ரெட்டிச்சாவடி, மேல் அழிஞ்சுப்பட்டு, கீழ்அழிஞ்சுப்பட்டு, பள்ளிப்பட்டு, கீழ்குமாரமங்கலம், தூக்கனாம்பாக்கம், நல்லாத்தூர், அழகியநத்தம் உட்பட்ட கிராமங்களில் விடிய, விடிய மழை பெய்தது.
ரெட்டிச்சாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கின. இதில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் சில பகுதிகளில் மழை நீர் தேங்கின.
கடலூர் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 34.8 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூரில் கடல் இன்று அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்தன. புயல் எச்சரிக்கை காரணமாக கடலூரில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை பகுதிகளில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. விழுப்புரத்தில் காலை 9 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. காலை 11.30 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை பெய்தது.
விழுப்புரம் நேருஜி சாலை, விழுப்புரம் புதுவை சாலை, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் கீழ் பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதே போல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். நேற்று பெய்த மழையினால் வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.