செய்திகள்
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 6 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 6 பேர் கைது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் செவிலிமேடு கூட்டுச் சாலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய தாயார் குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா, பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, குமரேசன், ராமசந்திரன், ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கீழகதிர்பூர் பகுதியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுரங்கம், வரதராஜ் ஆகியோரை பாலுச்செட்டிசத்திரம் போலீசார் கைது செய்தனர்.