செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா பயணி திடீர் மரணம்

Published On 2016-04-04 15:17 IST   |   Update On 2016-04-04 15:17:00 IST
கொல்கத்தாவில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்தார்.
ஆலந்தூர்:

கொல்கத்தாவில் இருந்து இன்று காலை சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கினர்.

அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இறங்காதது குறித்து விமான பணி பெண்கள் விமான நிலைய டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். டாக்டர் சோதனை செய்து பார்த்த போது அவர் மரணம் அடைந்து இருப்பது தெரிந்தது.

போலீசார் விசாரணையில் இறந்தவர் கொல்கத்தாவை சேர்ந்த சகடெத் அலி (46) என்பதும், சிகிச்சைக்காக வேலூர் செல்ல வந்திருப்பதும் தெரியவந்தது.

Similar News