உள்ளூர் செய்திகள்

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர்கள் 2 பேர் பலி

Published On 2024-12-18 15:00 IST   |   Update On 2024-12-18 15:00:00 IST
  • கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
  • மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

கே.கே.நகர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கலாமணி(வயது 45). அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(32). இவர்கள் இருவரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

திருச்சி ஓலையூர் ரிங் ரோடு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது. இதில் கலாமணி, மாணிக்கம் ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.

அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. 2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.

மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் திரண்டு மாணிக்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்திலேயே பலியான மாணிக்கம் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News