செய்திகள்

பேஸ்புக் F8: ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு

Published On 2017-04-19 12:44 IST   |   Update On 2017-04-19 12:44:00 IST
பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்வில் பேசிய மார்க் சூக்கர்பர்க் வரும் காலத்தில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.
கலிபோர்னியா:

பேஸ்புக் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நேற்று துவங்கியது. நிகழ்வின் முதல் நாளான நேற்று டெவலப்பர்கள் மத்தியில் உரையாற்றிய பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க், பேஸ்புக்கின் அடுத்த பத்தாண்டு திட்டங்களைப் பற்றி விரிவாக பேசினார். இதில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என மார்க் தெரிவித்தார்.

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ், 'பேஸ்புக் எஃபெக்ட்ஸ் பிளாட்ஃபார்ம்' (Camera Effects platform ) என்ற தளம் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தை பயன்படுத்தி டெவலப்பர்கள் தங்களுக்கான பிரத்தியேகமான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் பேஸ்புக்கின் கேமராவில் இயக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.



பேஸ்புக்கின் புதிய தளம் ஏற்கனவே வெளியான 'போக்கிமான் கோ' கேம் போன்ற தளத்தை பேஸ்புக் வெளியிட வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் நேரடியாக மோதும் வகையில் பேஸ்புக் செயலிகள் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தைகளில் சாராமல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனரின் புதிய அறிவிப்பு மற்றும் திட்டங்கள் முழுமையாய் நிறைவேற பத்து ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இவை மேலும் விசித்திரமான மற்றும் புதுமையான அம்சங்களின் வெளியீட்டிற்கு வழி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

இந்நிகழ்வில் பேஸ்புக்கின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு, முன்னோட்டம், மற்றும் அறிமுகம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. எனினும், அடுத்த பத்து ஆண்டுகளில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்க அதிக முக்கியத்துவம் அளிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News