செய்திகள்

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் தேசதுரோகிகள்- பாண்டியராஜன்

Published On 2018-06-22 09:25 GMT   |   Update On 2018-06-22 09:57 GMT
பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் தேசதுரோகிகள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். #Greenwayroad #MinisterPandiarajan

ராயபுரம்:

வட சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மீட்பு வெற்றி பொதுக் கூட்டம் கொருக்குப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

தங்கத்தமிழ்செல்வன் வீரத்தை பாராட்டுகிறேன். வெகு விரைவில் ஆண்டிப்பட்டியில் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு வழி வகுத்த தங்கத் தமிழ் செல்வனுக்கு நன்றி.

 


பசுமை வழி சாலை திட்டம் மத்திய அரசிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் கோடி நிதி பெற்று செயல்படுத்தபடும் மிக பெரிய திட்டமாகும். இந்த திட்டம் மிக பெரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவது உண்மை இல்லை அவர்களை திசை திருப்பி தூண்டி விடுவது மிக பெரிய தேசதுரோகம்.

தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் ஆர்.கே நகரில் விரைவில் இடைதேர்தல் வரும். ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று கொடுத்த வாக்குகுறுதிகளை நிறைவேற்றும்.

தினகரன் ஆர்.கே நகர் வருவதில்லை என்பதை விட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை என்பதுதான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நடிகர் ராம ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #Greenwayroad #MinisterPandiarajan

Tags:    

Similar News