செய்திகள்
காஞ்சீபுரத்தில் நாளை அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரத்தில் நாளை அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் நாளை அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோ சனை கூட்டம் மாவட்ட கழக பிரதிநிதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்தில் வா.மைத்ரேயன் எம்.பி., கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், செம்மலை, பாண்டியராஜன் முன்னாள் அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன், நிர்வாகிகள் ஜெ.சி.டி.பிரபாகர், ராஜ கண்ணப்பன், மனோஜ்பாண்டியன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளார்கள்.
இந்த கூட்டத்திற்கான இடம் முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் 4 ஏக்கரில் தேர்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டம் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணிக்கு ஒரு திருப்புமுனை கூட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகளை வரவேற்கும் வகையில் வாலாஜாபாத்திலிருந்து கட்சி கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழக பிரதிநிதியும் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் செய்து வருகிறார்.
காஞ்சீபுரத்தில் நாளை அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோ சனை கூட்டம் மாவட்ட கழக பிரதிநிதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்தில் வா.மைத்ரேயன் எம்.பி., கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், செம்மலை, பாண்டியராஜன் முன்னாள் அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன், நிர்வாகிகள் ஜெ.சி.டி.பிரபாகர், ராஜ கண்ணப்பன், மனோஜ்பாண்டியன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளார்கள்.
இந்த கூட்டத்திற்கான இடம் முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் 4 ஏக்கரில் தேர்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டம் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணிக்கு ஒரு திருப்புமுனை கூட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகளை வரவேற்கும் வகையில் வாலாஜாபாத்திலிருந்து கட்சி கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழக பிரதிநிதியும் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் செய்து வருகிறார்.