செய்திகள்
தோல்வி பயத்தால் அ.தி.மு.க. இலவச திட்டங்களை அறிவித்துள்ளது: விஜயகாந்த் பிரச்சாரம்
தேர்தல் தோல்வி பயத்தில் அ.தி.மு.க. இலவச திட்டங்களை அறிவித்திருப்பதாக விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
கடலூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தி.மு.க.வும். அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என காமராஜரே கூறியிருக்கிறார். ஆறு கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு என்றுமே ஏறுமுகம்தான். செல்போன் இல்லாமல் இப்போது யாரும் கிடையாது. ஆனால், அ.தி.மு.க. செல்போன் இலவசமாக கொடுக்க இருப்பதாக சொல்லியிருக்கிறது.
பால் விலையை உயர்த்தி விட்டு தற்போது குறைப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் இலவசங்களை அறிவித்துள்ளது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அப்புறப்படுத்த வேணடிய விஷச் செடிகள்” என்றார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தி.மு.க.வும். அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என காமராஜரே கூறியிருக்கிறார். ஆறு கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு என்றுமே ஏறுமுகம்தான். செல்போன் இல்லாமல் இப்போது யாரும் கிடையாது. ஆனால், அ.தி.மு.க. செல்போன் இலவசமாக கொடுக்க இருப்பதாக சொல்லியிருக்கிறது.
பால் விலையை உயர்த்தி விட்டு தற்போது குறைப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் இலவசங்களை அறிவித்துள்ளது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அப்புறப்படுத்த வேணடிய விஷச் செடிகள்” என்றார்.