செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழனி கொளுத்தும் வெயிலில் ஓட்டு வேட்டை

Published On 2016-04-23 13:03 IST   |   Update On 2016-04-23 13:03:00 IST
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழனி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.


ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழனி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

கச்சிப்பட்டு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனி கொளுத்தும் வெயிலில் வீடுவீடாக சென்று பெண்களிடம் அ.தி.மு.க.அரசின் சாதனைகளை கூறி வாக்குசேகரித்தார்.அவருடன் மொளச்சூர் பெருமாள் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில் ராஜன், பொதுகுழு உறுப்பினர் எழுச்சூர் ராமச்சந்திரன், ஒன்றியகுழு துணை தலைவர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் பாபு, ஒன்றிய இணை செயலாளர் தமிழ் செல்வி முனுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, நிர்வாகிகள் சுப்புராயன், தங்கராஜன், இளங்கோவன், முன்னாள் சேர்மன் பிள்ளை பாக்கம் மூர்த்தி உள்பட பலர் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

Similar News