செய்திகள்

32 ஆண்டுகளுக்கு பிறகு பண்ருட்டி தொகுதியை கைப்பற்றிய அ.தி.மு.க.

Published On 2016-05-20 16:03 IST   |   Update On 2016-05-20 16:03:00 IST
32 ஆண்டுகளுக்கு பிறகு பண்ருட்டி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதனால் அ.தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சத்யா பன்னீர்செல்வம் 72,353 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

தி.மு.க.கூட்டணி சார்பில் போட்டியிட்ட விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் பொன்.குமார் 69,225 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

பண்ருட்டி தொகுதியில் கடந்த 1984–ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பண்ருட்டி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதனால் அ.தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Similar News