செய்திகள்

வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பு

Published On 2016-05-07 17:32 IST   |   Update On 2016-05-07 21:45:00 IST
வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யத்தை சுற்றியுள்ள ஆதனூர், பண்ணவயல், பண்ணால், ஆயக்காரன்புலம், ஆயக்காரன்புலம் 1ம் சேத்தி, 2ம் சேத்தி, வாட்டாக்குடி, மகாராஜபுரம், துளசியாபுரம், சாக்கை, கள்ளிமேடு, தாமரைக்குளம், வெள்ளப்பல்லம், வானவன்மகாதேவி, நடார்குளம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:–

தி.மு.க. ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளிஏற்றி வைத்தவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா. மாணவ, மாணவிகளின் கல்வியில் அக்கறை செலுத்தி அவர்களுக்கு தேவையான மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி ஊக்குவித்தார்.இல்லத்தரசிகளுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை வழங்கினார். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார். அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை.

வேதாரண்யம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து உங்களுக்கு பணியாற்ற உத்தரவிடுங்கள்.

நான் எப்போதும் உங்களோடு உங்களாக இருப்பேன். நீங்கள் எந்த நேரமும் என்னை சந்தித்து உங்களது குறைகளை சொல்லலாம். நீங்கள் அழைத்தவுடன் உடனே வரக்கூடியவன் நான் என உருக்கமாக பேசினார்.

பிரசாரத்தின் போது தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் அவை.பாலசுப்பிரமணியம், தலைமைக்கழக பேச்சாளர்கள் வேதை.சிவசண்முகம், பாலை.செல்வராஜ், வாய்மை இளஞ்சேகரன், தொகுதி செயலாளர் சண்முகராஜ், வேதை, ஒன்றிய செயலாளர் கிரிதரன், துணை செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News