வழிபாடு

தீபம் ஏற்றி வழிபாடு

Published On 2023-08-14 06:35 GMT   |   Update On 2023-08-14 06:35 GMT
  • அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.
  • பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய கோவிலின் ஈசான்ய மூலையில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் பூசாரி கூறியதாவது:-

இங்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கு முதலில் கோவிலின் உட்புறத்தில் நந்தி மற்றும் பலிபீடம் அருகில் வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அதிகமாக எண்ணெய் ஊற்றுவதால் நடந்து செல்லும் பக்தர்கள் அதில் வழுக்கி விழக்கூடும் என்பதால் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு பலன் உண்டு என்பதால் பக்தர்கள் அவர்களின் வேண்டுதல்கள் பொருட்டு விளக்கேற்றுகின்றனர். இங்கு விளக்கேற்றுவதால் அவர்களின் இல்லங்களில் உள்ள பிரச்சனைகள் அகன்று ஒளி ஏற்படுவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்பது அவர்கள் எங்களிடம் கூறுவது மூலம் அறியமுடிகிறது.

வழிபாட்டின் மகிமை

மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அலகு குத்தியும் வருவதுண்டு.

Tags:    

Similar News