வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் தொடக்கம்

Published On 2023-01-17 04:42 GMT   |   Update On 2023-01-17 04:42 GMT
  • 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது.
  • இன்று சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உத்தரவின்பேரில் உலக நல்லிணக்கத்துக்காக திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது. ஹோம மஹோற்சவத்தின் தொடக்க நாளான நேற்று கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.

அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்பிரமணியசாமி ஹோமம், நாளை (புதன்கிழமை) துர்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி ஹோமம், 19-ந்தேதி நவக்கிரக ஹோமம், 20-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 21-ந்தேதி ருத்ர மற்றும் மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.

Tags:    

Similar News