ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவில்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவு

Published On 2021-08-07 15:38 IST   |   Update On 2021-08-07 15:38:00 IST
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சீதா, கோதண்டராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு ஸ்நாபன திருமஞ்சனம்,. சாத்துமுறை, ஆஸ்தானம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு, ஆகம பண்டிதர் வேதாந்தம் விஷ்ணுபட்டாச்சார்யா, கோவில் சூப்பிரண்டு ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News