ஆன்மிகம்
பக்தர்கள் செல்ல தடை: சதுரகிரி மலைப்பாதையை கண்காணிக்கும் வனத்துறையினர்
கொரோனா பெருந்தொற்று காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 9-ந்தேதி வரை மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 9-ந்தேதி வரை கொரோனா பெருந்தொற்று காரணமாக மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆடி அமாவாசை அன்று மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட பக்தர்கள் யாரும் சாமி கும்பிட மலைமீது செல்லாமல் இருக்க அரசுத்துறையினர் குழு அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரையூர் தாலுகாவில் உள்ள வாழைத்தோப்பு பகுதி, தாணிப்பாறை நுழைவுவாயில், மலைபாதையில் உள்ள சின்ன பசுக்கடை, சங்கிலிப்பாறை, மற்றும் மலைமீது உள்ள சுந்தரமகாலிங்கம் கோவில், சந்தன மகாலிங்கம் கோவில் ஆகிய பகுதிகளில் பேரையூர் உட்கோட்டத்தில் போலீசார், சாப்டூர் வனத்துறையினர் மற்றும் பேரையூர் தாலுகா வருவாய் துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் பக்தர்கள் யாரும் செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே கொரோனா பரவலையொட்டி சதுரகிரி மலை பகுதிக்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை கேட்டு கொண்டு உள்ளது.
பேரையூர் தாலுகாவில் உள்ள வாழைத்தோப்பு பகுதி, தாணிப்பாறை நுழைவுவாயில், மலைபாதையில் உள்ள சின்ன பசுக்கடை, சங்கிலிப்பாறை, மற்றும் மலைமீது உள்ள சுந்தரமகாலிங்கம் கோவில், சந்தன மகாலிங்கம் கோவில் ஆகிய பகுதிகளில் பேரையூர் உட்கோட்டத்தில் போலீசார், சாப்டூர் வனத்துறையினர் மற்றும் பேரையூர் தாலுகா வருவாய் துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் பக்தர்கள் யாரும் செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே கொரோனா பரவலையொட்டி சதுரகிரி மலை பகுதிக்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை கேட்டு கொண்டு உள்ளது.