ஆன்மிகம்
தஞ்சை மாவட்டத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்களுக்கு தடை
இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் பொருட்டு மாவட்டத்தின் ஆற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதனை தவிர்க்கும் பொருட்டும், ஆற்றுப் படித்துறை உள்ளிட்ட ஆற்றினை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் அனைத்து ஆலயங்களிலும் பொதுமக்கள் கூடுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு மல்லிப்பட்டினம் ராமர் கோவில், திருவையாறு, ஐயாறப்பர் கோவில் மற்றும் காவிரி படித்துறை மற்றும் கும்பகோணம், காவிரி ஆறு, பகவதி படித்துறை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதனை முற்றிலும் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தடைகளை மீறும் நபர்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து தரப்பினரும் உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் பொருட்டு மாவட்டத்தின் ஆற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதனை தவிர்க்கும் பொருட்டும், ஆற்றுப் படித்துறை உள்ளிட்ட ஆற்றினை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் அனைத்து ஆலயங்களிலும் பொதுமக்கள் கூடுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு மல்லிப்பட்டினம் ராமர் கோவில், திருவையாறு, ஐயாறப்பர் கோவில் மற்றும் காவிரி படித்துறை மற்றும் கும்பகோணம், காவிரி ஆறு, பகவதி படித்துறை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதனை முற்றிலும் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தடைகளை மீறும் நபர்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து தரப்பினரும் உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.