ஆன்மிகம்
கஞ்சமலை கோவில்

பேளூர், கஞ்சமலை கோவில்களில் ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் தரிசனம் ரத்து

Published On 2021-08-05 07:56 GMT   |   Update On 2021-08-05 07:56 GMT
கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை விழா பிரசித்தி பெற்றதாகும். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் ஆடி அமாவாசை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. எனவே, மேற்கண்ட தினங்களில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

இதேபோல கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவிலிலும் 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் அன்றைய தினங்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதி இல்லை.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளதாக பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராதிகா, கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவில் செயல் அலுவலர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News