ஆன்மிகம்
வனபத்ரகாளியம்மன் கோவில்

வனபத்ரகாளியம்மன் கோவில் நுழைவு வாயில் முன் வழிபட்ட பக்தர்கள்

Published On 2021-08-04 04:55 GMT   |   Update On 2021-08-04 04:55 GMT
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடி வழிபடுவது வழக்கம். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா உயர தொடங்கியதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக ஆடி கிருத்திகை, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி, பேரூர் பட்டீஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளிட்ட 4 முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றங்கரையோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடி வழிபடுவது வழக்கம். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வாயிலான நெல்லித்துறை அலங்கார வளைவு பக்தர்கள் செல்லாதவாறு மூடப்பட்டிருந்தது. இதேபோல கோவில் கிழக்கு வாசல், பின்புறம் உள்ள வாயில் மூடப்பட்டு இருந்தது.

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நெல்லித்துறை அலங்கார வளைவு முன்புள்ள அம்மன் உருவம் முன்பு தேங்காய் உடைத்து அம்மனை வேண்டி வழிபட்டனர்.

மேலும் பவானி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாததால் நெல்லித்துறை பாலத்தின் கீழ் 7 கற்களை எடுத்து வைத்து அவற்றுக்கு சந்தனம், குங்குமமிட்டு பூஜை செய்து வணங்கினர்.
Tags:    

Similar News