ஆன்மிகம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்

Published On 2021-08-03 11:35 IST   |   Update On 2021-08-03 11:35:00 IST
அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும் நடந்தது.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 11 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும் நடந்தது.

தினமும் மாலையில் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

விழாவின் சிகர நாளான நேற்று மாலையில், சிறிய தேரில் அய்யா எழுந்தருளி, பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் புஷ்ப வாகனத்தின் மீது அமர்ந்தது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மனமுருக வேண்டினர்.

Similar News