ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டுகோள்
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பக்தர்களின் தரிசனத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவரும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் கிழக்கு கோபுரம், அம்மன் சன்னதி வழியாகவும், கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்குகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் போது அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தற்போது திருவிழா அதிகம் வரும் ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகஅளவில் கோவிலுக்கு வருகிறார்கள். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கோவில் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 4 வாசல்கள் வழியாகவும் பக்தர்களை வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். மேலும் இலவச தரிசனத்திற்கு ஒரே வாசல் வழியாக பக்தர்கள் கூட்டத்தை அனுமதிப்பதன் மூலம் அது கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது.
தமிழகத்தின் எந்த ஒரு பெரிய கோவிலும் இத்தகைய சூழ்நிலை இல்லாத நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் அனைத்து வாசல்களையும் பக்தர்களுக்கு திறந்துவிட மறுப்பது கண்டித்தக்கது. எனவே நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்து அனைத்து வாசல்களையும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிக்கு ஆன்மிக சிந்தனையும், இறைநம்பிக்கையும் கொண்ட, திருப்பணி போன்ற தொண்டுகளில் அனுபவமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்டவர்கள் திருப்பணி குழு தலைவராகவும், குழு உறுப்பினராகவும் நியமனம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகளையோ, அமைச்சர் என்ற அரசின் பொறுப்பில் உள்ளவரையோ திருப்பணிக்குழுவில் இடம் பெற செய்யக்கூடாது.
மேலும் கோவில் நலனில் அக்கறை கொண்டோர் துறவியர், இந்து அமைப்புகளில் பணி செய்வோர், கல்வியாளர், மருத்துவர், வக்கீல்கள், வியாபாரிகள் என இந்து சமயத்தின் மீது மாறாத பக்தியும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையை கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் கிழக்கு கோபுரம், அம்மன் சன்னதி வழியாகவும், கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்குகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் போது அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தற்போது திருவிழா அதிகம் வரும் ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகஅளவில் கோவிலுக்கு வருகிறார்கள். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கோவில் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 4 வாசல்கள் வழியாகவும் பக்தர்களை வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். மேலும் இலவச தரிசனத்திற்கு ஒரே வாசல் வழியாக பக்தர்கள் கூட்டத்தை அனுமதிப்பதன் மூலம் அது கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது.
தமிழகத்தின் எந்த ஒரு பெரிய கோவிலும் இத்தகைய சூழ்நிலை இல்லாத நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் அனைத்து வாசல்களையும் பக்தர்களுக்கு திறந்துவிட மறுப்பது கண்டித்தக்கது. எனவே நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்து அனைத்து வாசல்களையும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிக்கு ஆன்மிக சிந்தனையும், இறைநம்பிக்கையும் கொண்ட, திருப்பணி போன்ற தொண்டுகளில் அனுபவமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்டவர்கள் திருப்பணி குழு தலைவராகவும், குழு உறுப்பினராகவும் நியமனம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகளையோ, அமைச்சர் என்ற அரசின் பொறுப்பில் உள்ளவரையோ திருப்பணிக்குழுவில் இடம் பெற செய்யக்கூடாது.
மேலும் கோவில் நலனில் அக்கறை கொண்டோர் துறவியர், இந்து அமைப்புகளில் பணி செய்வோர், கல்வியாளர், மருத்துவர், வக்கீல்கள், வியாபாரிகள் என இந்து சமயத்தின் மீது மாறாத பக்தியும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையை கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.