ஆன்மிகம்
பெரமையா கோவில்

மதுக்கூரில் பெரமையா கோவிலில் ஆடி திருவிழா

Published On 2021-07-27 03:16 GMT   |   Update On 2021-07-27 03:16 GMT
மதுக்கூரில் பெரமையா கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிமாதம் திங்கட்கிழமை திருவிழா கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
மதுக்கூர் பகுதியில் மதுக்கூர், மதுக்கூர் வடக்கு, சிராங்குடி, விக்ரமம், மூத்தாக்குறிச்சி ஆகிய பகுதியில் பெரமையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் திங்கட்கிழமை தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று இந்த ஆண்டுக்கான ஆடிமாதம் திங்கட்கிழமை திருவிழா கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடந்தது.

இதையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அதனை தொடர்ந்து தங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் கால்நடைகள் நலமுடன் இருக்க வேண்டி மதலை எனப்படும் மண்ணால் செய்த உருவங்களை வாங்கி பாதயாத்திரையாக பெரமையா தோன்றிய இடமான மதுக்கூரில் உள்ள தளியகுளத்தில் வைத்து வழிபட்டனர்.
Tags:    

Similar News