ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடி மாத விழாக்களை உள் திருவிழாவாக நடத்த முடிவு

Published On 2021-07-26 05:59 GMT   |   Update On 2021-07-26 05:59 GMT
ஆடி மாதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஆடி கார்த்திகை, ஆடிப்பூரம், சுந்தரர் குருபூசை, ஆடி பரணி ஆகிய விழாக்களை உள் திருவிழாவாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் சமீபகாலமாக ரத்து செய்யப்பட்டு வந்தது. சில கோயில்களில் பக்தர்கள் இல்லாமல் உள் திருவிழாவாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரை ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வந்தது.

ஆடி மாதம் கொண்டாடப்படும் விழாக்கள் ஆடி கார்த்திகை, ஆடிப்பூரம், சுந்தரர் குருபூசை, ஆடி பரணி ஆகிய விழாக்களை உள் திருவிழாவாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதே சமயத்தில் பக்தர்கள் அதிகம் கூடும் விழாக்களான 1008 திருவிளக்கு பூஜை ஆகியவற்றை கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News