ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை

Published On 2021-07-26 10:55 IST   |   Update On 2021-07-26 10:55:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம்.

அதன்படி நேற்று இரவு பவுர்ணமி கருட சேவை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Similar News